தோனி இல்லாத சிஎஸ்கே கடும் சொதப்பல்! ஹைதராபத்திற்கு எளிதான இலக்கு!

தோனி இல்லாமல் இன்று விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் கடுமையாக சொதபிப்யுள்ளது. 20 ஓவர்களின் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு வெறும் 132 ரன் மட்டுமே எடுத்து உள்ளது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா பேட்டிங் தேர்வு செய்தார்.

துவக்க வீரர் ஷேன் வாட்சன் மற்றும் டு ப்லெசி ஆகிய இருவரும் நன்றாக ஆடினார். வாட்சன்  29 பந்துகளில் 32 ரன்னும் 31 பந்துகளில் 45 ரன்னும் எடுத்தனர். அதற்கு பிறகு வந்த ரெய்னா 13 ரன்னும் ராயுடு 25 ரன்கள் மட்டுமே எடுத்தார். இறுதியாக வந்த ரவிந்திர ஜடேஜா 20 பந்துகளில் 10 டன் மட்டுமே எடுத்தார். இதன் காரணமாக சென்னை அணி 20 ஓவர்களின் முடிவில் 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

author avatar
Srimahath

Leave a Comment