37 C
Chennai
Sunday, June 4, 2023

விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக நான் பிரார்த்திக்கிறேன்… போப் பிரான்சிஸ் இரங்கல்.!

ஒடிசா விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தனது இரங்கலை தெரிவித்துள்ளார் புனித...

கணவருடன் சண்டை…4 குழந்தைகளை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்த பெண்.!!

ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தில் உள்ள 27 வயது பெண்...

பட்டாசு ஆலை விபத்து…பலியானோரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்..நிவாரணம் அறிவித்த முதல்வர்.!!

விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு தலா 3 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார் முதலமைச்சர்.

சிவகாசி ஆனையூர் அருகே தனியாருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த பட்டாசு தொழிற்சாலையில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் குமரேசன்(35), சுந்தர்ராஜ்(27)அய்யம்மாள் (70) ஆகிய 3 பெரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், படுகாயமடைந்த இருளாயி என்பவருக்கு சிவகாசி அரசு மருத்துவனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததோடு நிவாரணத்தை அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் ” பட்டாசு அலை வெடிவிபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த உயிரிழந்தவர்களின் இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 3 இலட்சம் ரூபாயும், காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் இருளாயி அவர்களுக்கு 50,000 ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்”: என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.