50% ஊழியர்களுடன் நீதிமன்ற பணிகள் – பதிவாளர் தனபால் அறிவிப்பு..!

ஜூன் 14 ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரைக் கிளையில் வரும் ஜூன் 14 ம் தேதி முதல் 50 சதவீத பணியாளர்களுடன் மட்டுமே அனைத்து பிரிவுகளும் செயல்படும் என  தலைமை பதிவாளர் தனபால் தெரிவித்துள்ளார். மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீதிமன்ற ஊழியர்கள் இரு பிரிவுகளாக பிரித்து ஒவ்வொரு பிரிவுக்கும் இரண்டு நாள்கள் பணிக்கு வர அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

author avatar
murugan