ராஜஸ்தானில், திருமணம் நடைபெறும் நாள் அன்று மணமகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதுகாப்பு உடை அணிந்து மணமக்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்பூர் நகரில் ஷாபாத் நகரின் பரா பகுதியில் வசித்து வரக்கூடிய இருவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் திருமணத்துக்கு முன்னதாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கான சோதனைகளை முடித்துள்ளனர். இந்நிலையில் திருமணம் நடைபெறக்கூடிய நாளில் வெளியாகிய கொரோனா பரிசோதனையின் முடிவில் மணமகளுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்ததையடுத்து மணமக்கள் இருவருக்கும் கொரோனா தடுப்பு தனிநபர் பாதுகாப்பு உடைகள் அணிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் இருவரும் முறையாக திருமணத்திற்கான சடங்குகளை முடித்துள்ளனர். இவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த முக்கியஸ்தரும் தனிநபர் தடுப்பு பாதுகாப்பு உடைகளை அணிந்தே திருமணம் நடத்தி வைத்துள்ளார். மக்கள் கூடுகை தவிர்க்கப்பட்டு இருந்தாலும் இவர்களின் திருமணம் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கொரோனாவுக்கு மத்தியிலும் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.
Kotak Mahindra Bank : கோடாக் மஹிந்திரா வங்கியின் பங்குகள் 10 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. இந்தியாவில் முதன் முதலாக ஸீரோ (0.00) பேலன்ஸ் வங்கி கணக்கை…
Gold Price: ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று அதிகரித்த நிலையில், இன்று சற்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும்…
Nainar Nagendran: தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். மக்களவை தேர்தல் காரணமாக கடந்த 6ம்…
Congress : உத்திர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக உள்ள அமேதி மற்றும் ரேபரேலி தொகுதிகளில் இன்னும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை. நாடாளுமன்ற தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம்…
Indian Items: 527 இந்தியப் பொருட்களில் புற்றுநோய் உண்டாக்கும் ரசாயனங்கள் இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டறிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஹாங்காங் மற்றும் சிங்கப்பூரில் இந்திய தயாரிப்பு…
JEE Main Result: நாட்டின் முதன்மை பொறியியல் கல்வி நிறுவனங்களின் சேர்க்கைக்கான ஜேஇஇ முதன்மை நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. ஜேஇஇ மெயின் தேர்வு முடிவுகளை தேசிய…