கரப்பான் பூச்சி பயத்தால் 18 முறை வீடு மாறிய தம்பதியினர்…! இறுதியில் கணவர் எடுத்த முடிவு…!

கரப்பான் பூச்சி பயத்தால் 18 முறை வீடு மாறிய தம்பதியினர். 

சில பெண்களுக்கு பூச்சிகள் என்றாலே சற்று பயமும், அலட்சியும் உண்டு. அந்த வகையில், மத்திய பிரதேச மாநிலம் போபாலில் வசித்துவரும் ஒருவர், தனது மனைவிக்கு கரப்பான் பூச்சி குறித்த பயம் இருப்பதால் மிகப்பெரிய இன்னல்களுக்கு ஆளாகி உள்ளார். அவர் திருமணமான, அதாவது 2017-ம் ஆண்டு திருமணத்திற்கு பின்பு தான் அவருக்கு கரப்பான்பூச்சி குறித்த பயம் இருப்பது தெரியவந்துள்ளது.

சமையலறையில் கரப்பான் பூச்சி இருப்பதை கண்ட பின் மிகவும் சத்தம் போடுவாராம். இதனால் அவரது குடும்ப உறுப்பினர்களே பயப்படும் அளவுக்கு அவரது அலறல் சத்தம் இருக்கும் என அப்பெண்ணின் கணவர் கூறுகிறார். இதனை அடுத்து 2018-ஆம் ஆண்டிலிருந்து கரப்பான் பூச்சி தொல்லை காரணமாக 18 முறை வீடு மாதிரி உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தனது மனைவியின் கரப்பான்பூச்சி பயத்தை போக்க, மருத்துவ சிகிச்சை நாடும்படி அவரிடம் கூறியுள்ளா.ர் ஆனால் மருத்துவர் கொடுத்த எந்த மருந்தையும் அவரது மனைவி உட்கொள்ள மறுத்து விட்டதாகவும், மருத்துவ சிகிச்சை அளிப்பதன் மூலம் தம்மை மனநலம் பாதிக்கப்பட்டவர் என அறிவிக்க தமது கணவர் முற்படுவதும் அவரது மனைவி தெரிவித்தாராம்.

இந்நிலையில், இருவரின் எந்த ஆலோசனைகளும் பலனளிக்காத நிலையில், வேறு வழியின்றி அப்பெண்ணின் கணவர் விவாகரத்து செய்வதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.