சிங்கத்தை வேட்டையாடி முத்தம் கொடுத்து புகைப்படம் எடுத்து கொண்ட ஜோடி !

தென்னாப்பிரிக்காவை சார்ந்த பல சுற்றுலா நிறுவனங்கள் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக காட்டில் உள்ள மிருகங்களை வேட்டையாடுவதை பொழுதுபோக்கு மாற்றி உள்ளது.அதன் படி ஒவ்வொரு மிருகத்திற்கும் ஒவ்வொரு  விலையை நிர்ணயித்து சுற்றுலா பயணிகள் தானாக வேட்டையாடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து தருகின்றனர்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுலா சென்ற கனடாவை சார்ந்த இளம் ஜோடி டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி ” லெகிலாசபாரி” என்ற சுற்றுலா நிறுவனம் மூலம் இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த வேட்டையாடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டேரன் -கார்லோன் கார்ட்டர் தம்பதி தூப்பாக்கியால் சுட்டு கொண்டனர்.பின்னர் இறந்த சிங்கத்தின் அருகில் இருவரும் முத்தமிட்டு கொண்டனர்.அவர்கள் வெளியிட்ட புகைப்படத்தை ” லெகிலாசபாரி” சுற்றுலா நிறுவனம் தனது முகநூலில் பதிவிட்டது.

இந்த புகைப்படத்தை பார்த்த இணைத்தள ஆர்வர்கள் அந்த இளம் ஜோடியையும் , ” லெகிலாசபாரி” சுற்றுலா நிறுவனத்தையும் கடுமையாக விமர்சனம் செய்து கருது தெரிவித்து வருகின்றனர்.மேலும் “சிங்கத்தை வேட்டையாடுவதை நிறுத்துங்கள்”  என்ற ஹேஷ் டேக் பயன்படுத்தி அந்த புகைப்படத்தையும் பதிவிட்டு வருகின்றனர்.

author avatar
murugan