சட்டமன்றத்தில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை – எம்எல்ஏ, உதயநிதி ஸ்டாலின்

சட்டமன்றத்தில் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை – எம்எல்ஏ, உதயநிதி ஸ்டாலின்

திமுக ஆட்சியை, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாராட்டுவதாக திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை அருகே கோவில்பட்டியில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய திமுக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலின், தமிழக சட்டமன்றத்தில் ஒவ்வொரு நாளும் விதி எண் 110-ன் கீழ் முத்தான அறிவுப்புகளை முதலமைச்சர் முக ஸ்டாலின் வெளியிட்டு வருகிறார்.

ஒட்டுமொத்த தமிழக மக்களும் மகிழ்ச்சியடையும்படி பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். சட்டமன்றத்தின் என்னால் ரொம்ப நேரம் உட்கார முடியவில்லை. ஏனென்றால், யாரும் எதிர்த்து பேசமாட்டிக்கிறார்கள். திமுக ஆட்சியை, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் பாராட்டுவதாக தெரிவித்தார்.

அதில் குறிப்பாக, அதிமுகவின் எஸ்பி வேலுமணி, எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திமுகவின் ஆட்சியை பாராட்டி பேசுகிறார்கள். அந்த அளவுக்கு தமிழக அரசின் செயல்பாடு சிறப்பாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube