பள்ளிகளை தொடர்ந்து திருமண மண்டபங்களையும் ஒப்படைக்க மாநகராட்சி நோட்டீஸ்.!

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்  வழங்கியுள்ளது

சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் இருக்கிறது. அங்கு கடந்த வாரத்தில் மட்டும் இரு மடங்கிற்கும் அதிகமாக கொரோனா தொற்று பரவியுள்ளது. இதனால் அங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

சென்னையில் ஏற்கனவே கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைகளில் கொரோனா வார்டு நிரம்பியதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி இருந்தன. இதனை அடுத்து சென்னை மாநகராட்சியில் உள்ள அரசு, தனியார் பள்ளிகளில் கொரோனா வார்டுகளை அமைக்க பள்ளிகளை மாநகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

இதனை தொடர்ந்து, தற்போது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் இருக்கும் அனைத்து திருமண மண்டபங்களையும் மாநகராட்சியிடம் ஒப்படைக்குமாறு மண்டப உரிமையாளர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ்  வழங்கியுள்ளது. அந்த மண்டபத்தில் கொரோனா பணிகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட உள்ளன.  

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.