ரஸ்யாவில் மீண்டும் தனது ஆட்டத்தை தொடங்கிய கொடிய கொரோனா பெருந்தொற்று…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி சொல்லனாத்துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. தற்போதுவரை 47 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதில்,  இந்த வைரஸ் தொற்றுக்கு இதுவரை 3 லட்சத்து 12ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில்  கொரோனா வைரஸ் தொற்று ரஷ்யாவில் மிகுந்த கட்டுப்பாட்டிற்குள் இருந்த நிலையில், தற்போது  மீண்டும் அங்கு கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 9,200 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
 
இதன்மூலம் ரஷ்யாவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 2,72,043 என அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுக்கு இன்று 119 பேர் உயிரிழந்ததால், அங்கு பலியானோர் எண்ணிக்கை 2,537 ஆக அதிகரித்துள்ளது.  மேலும் அங்கு கொரோனா தொற்றின் பாதிப்பிலிருந்து 63,116 பேர் முழுமையாக சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது உலகளவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் ரஷ்யா 3-வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
author avatar
Kaliraj