தலைநகர் டெல்லியில் 10 ஆயிரம் பேரை கடந்த கொரோனா பாதிப்பு…

தலைநகர் டெல்லியில் 10 ஆயிரம் பேரை கடந்த கொரோனா பாதிப்பு…

தலைநகர் டெல்லியில்  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
 
இந்தியா முழுவதும் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்த  இந்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், இன்று மட்டும் தலைநகர் டெல்லியில் புதிதாக 299 பேருக்கு  கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாதால்  இந்தியாவில் 10 ஆயிரத்தை தாண்டிய 4-வது மாநிலமாக தலைநகர் டெல்லி மாறியுள்ளது. ஏற்கனவே  மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
author avatar
Kaliraj
Join our channel google news Youtube