கொரோனா தொற்றால் நிலைகுலைந்த அமெரிக்கா… இதுவரை 8,444 பேர் பலி…மேலும் அதிகரிக்கும் என அச்சம்…

உலகம் முழுவதும் பரவி தனது ஆட்டத்தை காட்டிக்கொண்டு இருக்கும்  கொடிய கொரோனா வைரஸ் தொற்றால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 64 ஆயிரத்தை கடந்ததுள்ளது.இதில்,  பல்வேறு நாடுகளை சேர்ந்த 64,675 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 1,201,443 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்  இதில், 246,383 பேர் குணமடைந்தனர். மேலும் 42,288 பேர் கவலைக்கிடமான நிலையில் தற்போதும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வூஹானில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ஆம் தேதி கண்டறியப்பட்டு தற்போது 205 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதிலும் குறிப்பாக  குறிப்பாக அமெரிக்கா, ஈரான், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் கொரோனா தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஐக்கிய அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 72 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் வைரஸ் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.  தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில் 3 ,10, 233 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று  பரவியுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு நேற்று ஒரே நாளில் மட்டும் ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை தற்போது 8,444 பேராக அதிகரித்துள்ளது. இந்த செய்தி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
author avatar
Kaliraj