கொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி… பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி….

கொரோனா இல்லாத மாவட்டமாகிறது தர்மபுரி… பச்சை மண்டலமாக மாறிய தர்மபுரி….

தருமபுரி மாவட்டத்தில்  கொரோனாவுக்கு சசிகிச்சை பெற்ற 5 பேரும் குணமடைந்ததால் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாறியுள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும்  கொரோனா  பெருந்தொற்றினால் இந்தியா முழுவதும் 106,475 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3,302 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மட்டும் 6,147 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 146 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது 60,864 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் ஆதிக்கம் படிப்படியாக குறைந்து வரும் மாவட்டங்களை பச்சை மண்டலங்களாக அரசு அறிவித்து ஊரடங்கில் தளர்வும் அறிவித்துள்ளது. இந்நிலையில்  தருமபுரி மாவட்டத்தில்  கொரோனாவுக்கு சசிகிச்சை பெற்ற 5 பேரும் குணமடைந்ததால் அந்த மாவட்டம் பச்சை மண்டலமாக மாறுகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற கடைசி நபரும் தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். 

author avatar
Kaliraj
Join our channel google news Youtube