கொரோனா தடுப்பு ! நிவாரண பணிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் நிதி

கொரோனா தடுப்பு ! நிவாரண பணிக்கு மு.க.அழகிரி ரூ.10 லட்சம் நிதி

கொரோனா வைரஸ் அதிகமாவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மத்திய மாநில அரசுகள் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்களிடம் நிதியுதவி கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக பலரும் தங்களால் இயன்ற நிதியுதவிகளை அளித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி கொரோனா தடுப்பு பணிக்காக விருப்பம் உள்ளவர்களை நிதி அளிக்கலாம் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண பணிக்கு முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ரூ.10 லட்சம் நிதி வழங்கியுள்ளார். முதலமைச்சர் பொதுநிவாரண நிதி பிரிவுக்கு காசோலை மூலம் ரூ.10 லட்சம் வழங்கினார் மு.க.அழகிரி

Join our channel google news Youtube