திரிபுராவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திரிபுராவில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

திரிபுரா மாநிலத்தில் புதிதாக 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவில் புதிதாக 25 பேருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அம்மாநிலத்தின் முதலமைச்சரான பிப்லாப் குமார் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுவரை ஆயிரத்து 450 க்கும் மேற்பட்ட மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன அதில் 25 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் எந்தெந்த மாநிலங்களில் எந்தெந்த இடங்களில் எவ்வளவு கொரோனா தோற்று உள்ளது என்பதையும் முதலமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal
Join our channel google news Youtube