தனிமைப் படுத்தப்பட்ட 21 காவலர்கள்..பணி வர வேண்டாம் என உத்தரவு

புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உள்ள பகுதியில் வசிக்கும் 21 காவலர்களை தனிமையில் இருக்க உத்தரவு  புதுச்சேரி காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரியில் அரியங்குப்பம் பகுதியில் வசிக்கும்  3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் அபகுதியில் வசிக்கும் 21 காவலர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.மேலும் அப்பகுதியை சேர்ந்த 21 காவலர்களும் பணிக்கு வர வேண்டாம்  என புதுச்சேரி காவல்துறை அறிவுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha