கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் தமிழகத்தில் தான் மிகக்குறைவாக உள்ளது – ராதாகிருஷ்ணன்

கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் தமிழகத்தில் தான் மிகக்குறைவாக உள்ளது – ராதாகிருஷ்ணன்

கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் தமிழகத்தில் தான் மிகக்குறைவாக உள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ள மாவட்டங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது. சென்னையில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், சென்னையில் கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அவர் பேசுகையில், ‘கொரோனாவால் இறப்பவர்களின் விகிதம் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிகக் குறைவாக உள்ளது. சளி, காய்ச்சல் இருந்தால் உடனே அரசு மருத்துவமனைக்கு மாக்கள் செல்ல வேண்டும் என்றும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரை பார்க்க உறவினர்கள் செல்ல வேண்டாம்.’ என்றும் தெரிவித்துள்ளார். 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube