24 மணி நேரத்தில் 6 பலி..106 பேர் புதியாக பாதிப்பு-அறிவித்தது சுகாதாரத்துறை

கொரோனா வைரஸ் தற்போது மிக வேகமாக பரவி வருவதை அண்மைக்கால சுகாதார அறிவிப்பு மூலமாக அறிய முடிகிறது.இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் 500 க்கும் குறைவாக இருந்த எண்ணிக்கை தற்போது மின்னல் வேகத்தில் அதிகரிப்பதை பார்க்க முடிகிறது.இந்நிலையில் தற்போது சுகாதாரத்துறை அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.அதில் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் பலியாகி உள்ளதாகவும் மேலும் புதிதாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதாரத்துறை இணை செயலர் லாவ் அகர்வால் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பிற்கு  25 பேர் உயிரிழந்துள்ளனர்.  979 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha