புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா.! பாதிப்பு 11 ஆக உயர்வு.!

புதுச்சேரியில் மேலும் இரண்டு பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மொத்தம் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரியில் புதிதாக மேலும் இரண்டு பேருக்கு  கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று செய்தியாளர்களிடம் சந்திப்பில் தெரிவித்துள்ளார். இதனால் அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு இரண்டு பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த 2 பேரில் ஒருவர் செல்லிப்பட்டு கிராமத்தை சேர்ந்த 37 வயது வாலிபரும், மற்றோருவர் குச்சிபாளையத்தை சேர்ந்தவருக்கும்  கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இந்நிலையில், கொரோனா வைரசால் இதுவரை 11 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் காரைக்கால் மற்றும் ஏனாமில் இதுவரை ஒருவருக்கு கூட கொரோனா தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், அந்த இரண்டு பகுதிகளும் தொடர்ந்து பச்சை மண்டலமாக இருந்து வருகிறது. அண்டை மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருவதை தடுத்ததாலேயே இதை கட்டுப்படுத்த முடிந்ததாகவும், மத்திய அரசு இதுவரை நிதி ஏதும் வழங்கவில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்