டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா.!

டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா.!

டெல்லியில் உள்ள நிஜாமுதீன் பகுதியில் கடந்த மாதம் 13 முதல் 15ம் தேதி வரை தப்லிகி ஜமாத் என்ற இஸ்லாமிய மத அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் பங்கேற்ற பலருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவில் இதுவரை 1397 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 123 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். இந்நிலையில் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற தப்லிகி ஜமாத் இஸ்லாமிய மத கூட்டத்தில் கலந்து கொண்டு ஆந்திரா திரும்பிய 18 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதனால் ஆந்திராவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே தமிழகத்திலும் டெல்லி கூட்டத்தில் பங்கேற்று திரும்பிய 50 பேருக்கு கொரோனா இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்
Join our channel google news Youtube