திருச்சியில் கொரோனா பாதிப்பால் முதல் உயிரிழப்பு.!

திருச்சியில் கொரோனா வைரஸ் தாக்கத்தால், 70 வயது மூதாட்டி சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் இன்று உயிரிழப்பு.

திருச்சியில் ஆழ்வார்தோப்பு பகுதியை சேர்ந்த 70 வயது மூதாட்டி கொரோனா அறிகுறிகளுடன் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதை அடுத்து,மருத்துவர்கள் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்தனர். மேலும், அவர் நீரிழிவு நோயாலும் அவதிப்பட்டு வந்தார்.

இந்நிலையில், அந்த மூதாட்டி, சிகிச்சை பலனின்றி இன்று காலை திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். இது, திருச்சியில் முதல் உயிரிழப்பு எனவும், அம்மாவட்டத்தில் 22 பேர் கொரோனவால் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதில் 9 பேர் திருச்சி சேர்ந்தவர்கள் எனவும், 13 பேர் அறியலூரை சேர்ந்தவர்கள் எனவும், ஒருவர் சென்னையை சேந்தவர் என மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.