இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு!

இந்தியாவில் 2 லட்சத்தை கடந்த கொரோனா பாதிப்பு. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 8,909பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாக்கி வருகிறது. இந்த வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிற நிலையில், இதுவரை உலக அளவில், 6,485,571 பேர்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 382,412 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், இந்தியாவை பொறுத்தவரையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணக்கை 1,98,706-ல் இருந்து 2,07,615 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 1,00,303 பேர் இதுவரை குணமடைந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,815 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவால் 8.909பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 217 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.