24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – பாகிஸ்தானில் தொடரும் நிலை!

24 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு – பாகிஸ்தானில் தொடரும் நிலை!

பாகிஸ்தானில் 24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை பல நாடுகளில் காட்டி வருகிறது. உலகம் முழுவதும் இதுவரை 3,822,989 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 265,084 பேர் உயிரிழந்துள்ளனர். 

அதே சமயம் 1,302,995 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பு பாகிஸ்தானிலும் அதிகரித்து கொண்டே செல்கிறது. 

இதுவரை பாகிஸ்தானில் 24,073 பேர் இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 564 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 6,464 பேர் குணமாகி வீடு திரும்பியுமுள்ளனர். 

24 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் அங்கு நிலைமை மோசமாகி கொண்டே செல்கிறதாக கூறப்படுகிறது. 

author avatar
Rebekal
Join our channel google news Youtube