இந்தியாவில் கொரோனா பாதிப்பு 18,985 ஆகவும், உயிரிழப்பு 603 ஆகவும் உயர்வு.!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 200 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதில் வல்லரசு நாடுகளே திணறுகின்றனர். இதனால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. உலகளவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி 25,01,898 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,71,735 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 6,58,561 பேர் குணமடைந்து உள்ளார்கள்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டது. இருந்தாலும் பாதிப்பும், உயிரிழப்பும் உயர்ந்த வண்ணமே உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,985 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 603 ஆக உயர்ந்துள்ளது. பின்னர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,269 ஆக உள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 4,669, டெல்லியில் 2,081, குஜராத்தில் 2,066, ராஜஸ்தானில் 1,576, மத்திய பிரதேசத்தில் 1,540, தமிழ்நாட்டில் 1,520, உத்தரபிரதேசத்தில் 1,294 போன்ற மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்