தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பு

தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரிப்பு

தூத்துக்குடியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்த சமூக இடைவெளி அவசியம் என்றும் வெளியே செல்லும் முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதேயான இளைஞர் இன்று அதிகாலை 1 மணி அளவில் உயிரிழந்துள்ளார்.இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கனவே 2 பேர் உயிரிழந்த நிலையில் தற்போது 3 ஆக அதிகரித்துள்ளது.  நேற்று மட்டும் தூத்துக்குடியில் கொரோனவால் 18 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மொத்தமாக 397 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Join our channel google news Youtube