கொரோனோ வைரஸ் தொற்று உலகம் முழுவது மின்னல் வேகத்தில் பரவி தனது கோரத்தை அரங்கேற்றி வருகிறது.இதனால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டும் பல்லாயிரக்கணக்கானோர் அப்பாவி மக்கள் உயிரிழந்து உள்ளனர். உலகமே கொரோனாவை கண்டு கடும் அச்சத்தில் உள்ளது.இந்தியாவில் இதன் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது கவலை அளிக்கிறது.இதன் மின்னல் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளது.ஊரடங்கு உத்தரவு காரணமாக கோவில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் ஒன்றுக்கூடும் வழிபாடுகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஆனால் முறைப்படி பூஜைகள் எல்லாம் நடந்து வருகிறது.பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில்
பங்குனி மாதம் முருகனுக்கு சிறப்பு வாய்ந்த பங்குனி உத்திர திருவிழா நடைபெறுவது வழக்கம் ஆனால் இந்தாண்டுக்கான திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளது.பழனியில் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமர்சையாக தேரோட்டம் மற்றும் திருக்கல்யாண நிகழ்வோடு சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா வைரஸ் நோய் தொற்று அச்சம் காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இதே போல் திருச்செந்தூர் முருகன் கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் சாஸ்தா கோவில்களில் நடைபெறுகின்ற குலதெய்வ வழிபாடும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் நடைபெறும் ஆண்டாள் ரங்கமன்னார் திருக்கல்யாணமும் உடன் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Brian Lara : 42 வயதிலும் தோனி இப்படி விளையாடுவது வியப்பை ஏற்படுத்தி உள்ளது என பிரையன் லாரா கூறியுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் கிரிக்கெட் வீரர்…
Election2024: தமிழகத்தில் தேர்தல் நிலவரம் குறித்த துல்லியமான அறிவிப்பு தொடர்ந்து தள்ளிபோகி வருவதால் குழப்பத்தில் மக்கள். தமிழகத்தில் 39 தொகுதிகளில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்று…
கருப்பு உலர் திராட்சை -கருப்பு திராட்சையின் ஏராளமான நன்மைகள் பற்றி இப்பதிவில் அறிந்து கொள்வோம் . இயற்கை நமக்கு அளித்த இன்றியமையாத உணவுகளில் ஒன்றாக கருப்பு உலர்…
Sendrayan : பொல்லாதவன் படத்தின் டிக்கெட்டை பிளாக்கில் விற்று போலீஸ் கிட்ட தான் சிக்கியதாக சென்ராயன் கூறிஉள்ளார். காமெடி கதாபாத்திரங்கள் வில்லன் கதாபாத்திரங்கள் என இந்த மாதிரி…
The Shompen Tribes : அந்தமான் நிகோபார் தீவுகளில் வசித்து வரும் ஷாம்பன் பழங்குடியினர் முதன்முறையாக தேர்தலில் வாக்களித்தனர். நாடுமுழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 102…
Premalu 2: மலையாள சூப்பர்ஹிட் படமான 'பிரேமலு' படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மலையாள சினிமாவில் பிரம்மயுகம், மஞ்சும்மல் பாய்ஸ் மற்றும் பிரேமலு…