தமிழகத்தில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ க்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழகத்தில் மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ க்கு கொரோனா தொற்று உறுதி!

உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. ஒரே நாளில் சாரிசாரியாக 3-ஆயிரம் பேருக்கு மேற்பட்டோர் கொரோனவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதன்காரணமாக, கொரோனா தொற்று அதிகமுள்ள ஐந்து மாவட்டங்களில் ஜூலை 5-ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்த வைரசின் தாக்கத்தால் சட்டமன்ற உறுப்பினர்கள் பலரும் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், உளுந்தூர்பேட்டை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுருவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதுமட்டுமின்றி, இன்று காலை மற்றொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பரமக்குடி சதன் பிரபாகரனுக்கு கொரோனா தொற்று உறுதியானது குறிப்பிடத்தக்கது.

Join our channel google news Youtube