தமிழகத்தில் ஒரேநாளில் 18,692 பேருக்கு கொரோனா..,113 பேர் பலி..!

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 18,692 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் புதிதாக 18,692 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 11,66,756 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 5,473 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 3,33,804 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனாவால் இன்று 113 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14,046 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து இன்று 16,007 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரை 10,37,582 பேர் வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1,43,571 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 2,26,62,407 ஆக உள்ளது. மேலும், தற்போது 1,15,128 பேர் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் இன்று மட்டும் 11,439 ஆண்கள் , 7,253 பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் மொத்தம் 7,04,824 பேர் ஆண்கள், 4,61,894 பேர் பெண்கள் ஆவார்.

author avatar
murugan