பழனி தொகுதி திமுக எம்எல்ஏ -விற்கு கொரோனா பாதிப்பு உறுதி

பழனி தொகுதி திமுக எம்எல்ஏ செந்தில் குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.அந்த வகையில்  பழனி திமுக எம்எல்ஏ செந்தில்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா தொற்று உறுதியானதால், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.