உலகளவில் 5.75 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொரோனா!

உலகளவில் 5.75 லட்சம் உயிர்களை காவு வாங்கிய கொரோனா!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டியதுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.75 லட்சத்தை தாண்டி உள்ளது. சீனாவில் முதன் முதலாக கொரோனா வைரசின் அறிகுறியானது கடந்த ஆண்டு டிச.1-ம் தேதி  கண்டறியப்பட்டது.

தற்சமயம் 209 க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.இதில் குறிப்பாக அமெரிக்கா, ஈரான், ரஷ்யா, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் இத்தொற்றால்  கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 575,525 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தாகவும், உலகம் முழுவதும் கொரோனாவால் 13,235,751 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் 7,696,381 பேர் குணமடைந்துள்ளனர்.மேலும் 58,928 பேர் நிலை கவலைக்கிடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube