கொரோனா வைரஸ்…டிரம்ப் சொன்ன பதிலால் அச்சத்தில் அமெரிக்க வாசிகள் ..!

கொரோனா வைரஸ்…டிரம்ப் சொன்ன பதிலால் அச்சத்தில் அமெரிக்க வாசிகள் ..!

சீனாவில் கடந்த  டிசம்பர் மாத இறுதியில் உகானில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் உகானில் சீனா முழுவதும் பரவியது.மேலும்  சீனா மட்டுமின்றி உலகம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை அடுத்து கொரோனா வைரஸ் தென்கொரியா மற்றும் ஈரானில்  அதிக வேகமுடன் பரவி வருகிறது. இந்த நாடுகளில் வைரஸ் பாதிப்ப்பால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  தினமும் கொண்டே செல்கிறது. 

கொரோனா வைரஸ் உலக முழுவதும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு  கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில்  அமெரிக்காவில் கொரோனா வைரசால் 17 பேர்  பலியாகி உள்ளனர். மேலும் 299 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.இதையெடுத்து அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் “கொரோனா” பாதிப்பு குறித்து பேசினார்.

அப்போது” ஒட்டு மொத்தத்தை கணக்கிடும் போது அமெரிக்க மக்கள் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இருப்பது குறைவே” என  கூறினார்.மற்றநாடுகள் கொரோனாவால் போராடி வரும் நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த கருத்து அமெரிக்கா மக்களிடையே ஒரு  வித அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan
Join our channel google news Youtube