காசி யாத்திரை சென்று காரில் திரும்பிய 22பேர்.! தடுத்து நிறுத்தி கிடுக்குப்பிடி மருத்துவ பரிசோதனை

கொரோனா வைரஸிற்கு உலக நாடுகளில் பலி எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்தியாவில் 10 பேர் இந்த கொலைக்கார வைரஸிற்கு பலியாகிய நிலையில் 400க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழகத்தில் இந்த வைரஸால் முதல் உயிர் பலியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த வைரஸை கட்டுப்படுத்தவும் அதனை பரவாமல் தடுக்கவும் மத்திய மாநில அரசுகள் கடுமையான முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பிரதமர் மோடி இந்தியா முழுவதும் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் 21 நாட்களுக்கு  ஊரடங்கு உத்தரவினை பிறப்பித்துள்ளார். அதே போல் தமிழக முதல்வர் பழனிச்சாமியும் நேற்று மாலை 6 முதல் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் அறிவித்த நிலையில் அது குறித்த அரசாணையையும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் காசி யாத்திரைக்கு சென்று திரும்பிய 22 பேரை மேட்டூரில் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் கடந்த  16ம் தேதி காசி யாத்திரைக்காக சென்றவர்கள் மும்பைக்கு சென்று பின்னர் கர்நாடக மாநிலம் பெங்களூர் வழியாக காரில் திரும்பினர். இந்நிலையில் காரில் வந்த 10 பெண்கள் உள்ளிட்ட 22 பேரை மேட்டூர் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அவர்களுக்கு மருத்துவபரிசோதனை செய்யப்பட்டது. எல்லைகள் தீவிர கண்காணிப்பில் காவல் துறையினர் விடியவிடிய ஈடுப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
kavitha