கொரோனா தடுப்பு மருந்துகளை தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் – மைக்ரோசாப்ட் நிறுவனர்

கொரோனா தடுப்பு மருந்துகளை தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும்.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை இந்த வைரஸ் பாதிப்பால் உலக அளவில், 13,266,196 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 576,285 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ், இதுகுறித்து கூறுகையில், கொரோனா தடுப்பு மருந்துகளை அதிக விலைக்கு கேட்பவர்களுக்கு கொடுக்க வேண்டாம். அவற்றை மிகவும் தேவையான மக்களுக்கு மட்டுமே வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உயிர் மற்றும் பொருளாதாரத்தை மீட்க மருந்துகள் முக்கிய பங்கு வகிப்பதால், இதில் உள்நோக்கத்துடன் போட்டியிட வேண்டாம் என தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.