மத்திய பிரதேசத்தில் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தடுப்பூசி போட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இது குறித்த விளக்கத்துடன் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இதயம் மற்றும் நுரையீரலின் செயலிழப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டது என்று கூறியுள்ளது.
கொரோனா தடுப்பூசி அளவு காரணமாக அந்த நபர் இறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை பாரத் பயோடெக் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. மூன்றாம் கட்டத்திற்கான அனைத்து தடுப்பூசி அளவுகோல்களையும் இறந்த தன்னார்வலர் நிறைவு செய்துள்ளார். 7 நாட்களுக்கு பிறகு எந்த விளைவும் காணப்படவில்லை, அவரது அறிக்கைகள் அனைத்தும் நன்றாக இருந்தன என்று பாரத் பயோடெக் தெரிவித்தது.
போபாலின் காந்தி மருத்துவக் கல்லூரி வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, போபால் காவல்துறை விசாரணை அறிக்கையின்படி, அந்த நபர் இருதய சுவாசக் கோளாறு காரணமாக இறந்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 21, 2020 அன்று தன்னார்வலர் உயிரிழந்தார். இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) சமீபத்தில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகாவின் கோவ்ஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Patna: பீகார் தலைநகர் பாட்னாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா ரயில்…
Congress : காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை விளக்கி கூற பிரதமரிடம் நேரம் கேட்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஞாயிற்று கிழமை அன்று…
Gukesh D : நடைபெற்ற கேண்டிடேட்ஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு சென்னையில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. கனடா நாட்டில் நடைபெற்று வந்த பிடேகேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில்…
Summer tips-கோடை காலத்தில் நம்மை பாதுகாத்துக் கொள்வது எப்படி என இப்பதிவில் தெரிந்து கொள்வோம். உலக சுகாதார நிறுவனம் : புவி வெப்ப மையமாதலின் காரணமாக வெயிலின்…
Senthil balaji: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 35ஆவது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு. சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்ட வழக்கில் கடந்த…
Arvind Kejriwal: மதுமான கொள்கை முறைகேடு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரூ.100 லஞ்சம் அளிக்கப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை பதில் மனு. டெல்லியில் கொண்டுவரப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய மதுபான…