Corona Vaccine News: தடுப்பூசி போட்ட தன்னார்வலர் உயிரிழப்பு.. பாரத் பயோடெக் விளக்கம்..!

மத்திய பிரதேசத்தில் கோவாக்சின் மூன்றாம் கட்ட பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர் ஒருவர் தடுப்பூசி போட்ட ஒன்பது நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். இது குறித்த விளக்கத்துடன் பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டது. அதில், இதயம் மற்றும் நுரையீரலின் செயலிழப்பு காரணமாக இந்த மரணம் ஏற்பட்டது என்று கூறியுள்ளது.

கொரோனா தடுப்பூசி அளவு காரணமாக அந்த நபர் இறந்துவிட்டார் என்ற குற்றச்சாட்டை பாரத் பயோடெக் முற்றிலுமாக நிராகரித்துள்ளது. மூன்றாம் கட்டத்திற்கான அனைத்து தடுப்பூசி அளவுகோல்களையும் இறந்த தன்னார்வலர் நிறைவு செய்துள்ளார். 7 நாட்களுக்கு பிறகு எந்த விளைவும் காணப்படவில்லை, அவரது அறிக்கைகள் அனைத்தும் நன்றாக இருந்தன என்று பாரத் பயோடெக் தெரிவித்தது.

போபாலின் காந்தி மருத்துவக் கல்லூரி வெளியிட்ட பிரேத பரிசோதனை அறிக்கையின்படி, போபால் காவல்துறை விசாரணை அறிக்கையின்படி, அந்த நபர் இருதய சுவாசக் கோளாறு காரணமாக இறந்தார் என கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

 டிசம்பர் 21, 2020 அன்று தன்னார்வலர் உயிரிழந்தார். இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (டி.சி.ஜி.ஐ) சமீபத்தில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராசெனெகாவின் கோவ்ஷீல்ட் மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்ஸின் அவசரகால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்தது. கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan