ஆந்திராவில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவிப்பு.
நாடு முழுவதும் மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த அனுமதி என மத்திய அரசு அறிவித்த நிலையில், தமிழகம், கேரளா, அசாம், உத்தரபிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என அறிவித்திருந்தன.
அந்த வகையில், தற்போது ஆந்திர மாநிலத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிரடியாக அறிவித்துள்ளார்.
இதனிடையே, மத்திய அரசு அறிவுறுத்தலின்படி, சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி மாநில அரசுகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.400 மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு டோஸுக்கு ரூ.600 என விலை அறிவித்திருந்தது.
இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அறிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதுகிறது. நடைபெற்று கொண்டிருக்கும் இந்த ஐபிஎல் தொடரின் 34-வது போட்டியாக இன்று லக்னோ…
ஐபிஎல் 2024 : கடைசி ஓவரில் ரோஹித் சர்மா செட் செய்த ஃபீல்டால் தான் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது என்று ரசிகர்கள் அவரை கொண்டாடி…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியும், மும்பை அணியும் மோதியது. நடைபெற்று வரும் இந்த ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியாக பஞ்சாப்…
ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரரான ஜிதேஷ் சர்மாவிற்கு சூரியகுமார் யாதவ் சிறிய அட்வைஸ் ஒன்று கொடுத்திருக்கிறார். பஞ்சாப் கிங்ஸ்…
Pushpa 2 The Rule : புஷ்பா 2 திரைப்படம் ஓடிடியில் எத்தனை கோடிக்கு விற்பனை ஆகி உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது. தென்னிந்திய சினிமாவில் அடுத்ததாக …
Kamal Hasan : தமிழ் சினிமாவின் ஒப்பனை கலைஞரான புஜ்ஜி பாபு, நடிகர் கமல்ஹாசனால் ஏற்பட்ட சில கசப்பான அனுபவத்தை தனியார் பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.…