மஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.80 லட்சமாக உயர்வு- சுகாதாரத்துறை அமைச்சகம்

மஹாராஷ்டிராவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1.80 லட்சமாக உயர்வு- சுகாதாரத்துறை அமைச்சகம்

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு 1,80,298 ஆக உயர்வு.

மஹாராஷ்டிராவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், ஒரே நாளில் 5,537 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,80,298 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், 2,243 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 93,154 ஆக உயர்ந்துள்ளது.அதில் 198 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,053 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மஹாராஷ்டிராவில் 79,075 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதார துறை அமைச்சகம் தெரிவித்தது.

Join our channel google news Youtube