கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக இன்று 10,606 பேருக்கு கொரோனா.!

கேரளாவில் முதல் முறையாக 10 அயர்த்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று ஒரே நாளில் 10,606 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மொத்த பாதிப்பு 2,53,405 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று கொரோனாவிலிருந்து 6,161பேர் குணமடைந்தனர்.

இதுவரை 1,60,253 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். மேலும், இன்று ஒரே நாளில் 22 பேர் கொரோனாவால் உயிரிழந்ததால் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 906 பேர் ஆக அதிகரித்துள்ளது. தற்போது, மருத்துவமனையில் 92,161 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர் என கேரள சுகாதார துறை தெரிவித்துள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.