அரக்கோணத்தில் ஒருவருக்கு கொரோனா – அனைத்து கடைகளும் அடைப்பு!

சீனாவில் தொடங்கியிருந்தாலும் தற்பொழுது சீனாவை விட்டுவிட்டு இந்தியா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் அமெரிக்கா என பல்வேறு நாடுகளை சீரழித்து வரும் மிக கொடுமையான வைரஸ் தான் கொரோனா. இந்த வைரசுக்கு இந்தியாவில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தின் அரக்கோணம் எனும் வட்டத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள் மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன, முன் எச்சரிக்கையாக அந்த ஊர் மக்கள் துரிதமாக தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

author avatar
Rebekal