சென்னையில் 786 போலீசாருக்கு கொரோனா.! 301 பேர் குணமடைந்தனர்

சென்னையில் மாவட்டத்தில் போலீசில் கொரோனா பாதிப்பு 786 ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டேதான் செல்கிறது , நேற்றும் ஒரு நாள் மட்டும் சென்னையில் 1375 பேருக்கு கொரனோ வைரஸால் பாதிக்கப்பட்டனர், இந்த நிலையில் சென்னையில் போலீசாருக்கு கொரனோ எண்ணிக் கை அதிகமாகதான் உள்ளது, சென்னை முன்னதாகவே 758 போலீசார் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று மாலை வரை புதியதாக மேலும் 28 பேருக்கு கொரனோ வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மேலும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக உயர்ந்தது என்றும் கூறப்படுகிறது.மேலும் மொத்தமாக பூரண குணமடைந்து பணிக்கு திரும்பியவர்களின் எண்ணிக்கை நேற்று 301 ஆக உயர்ந்துள்ளது மேலும் நேற்று ஒரு நாள் மட்டும் 16 பேர் பூரண குணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.