டெல்லியில் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்ட கொரோனா
டெல்லியில் இதுவரை இல்லாத உச்சத்தை தொட்ட கொரோனா
டெல்லியில் நேற்று மட்டும் 1,163 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .இதுவே ஒரே நாளில் உயர்ந்த அதிகபட்ச எண்ணிக்கையாகும் .டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18,549 ஐ எட்டியுள்ளது.8,075 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் 416 பேர் உயிரிழந்துள்ளனர் .
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவால் கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் எத்தனை காலி படுக்கைகள் இருக்கின்றன என்று அறிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார் .மேலும் டெல்லி அரசானது கொரோனாவை விட நான்கு மடங்கு வேகமாக செயல்படுகிறது என்று தெரிவித்தார் .
????Delhi Health Bulletin – 30th May 2020????#DelhiFightsCorona pic.twitter.com/cCjb6uHYPV
— CMO Delhi (@CMODelhi) May 30, 2020