உத்தரபிரதேசத்தில் கொடூரமாக பரவிய கொரோனா ஒரே நாளில் இதுவரை இல்லாத பதிவு

உத்தரபிரதேசத்தில் வியாழக்கிழமை ஒரே நாளில் 22,439 பேருக்கு  புதிய கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்ட்டுள்ளது.நேற்று மட்டும் 114 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது கொரோனா தொற்று பரவல் ஆரம்பித்ததிலிருந்து அம் மாநிலத்தி ஒரே நாளில் பதிவான எண்ணிக்கையில் உச்சகட்டமாகும். தற்போது மாநிலத்தில் 1,29,848 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று கூடுதல் தலைமைச் செயலாளர் (சுகாதார) அமித் மோகன் பிரசாத் தெரிவித்தார்.

இதுவரை, உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் 1,00,51,328 பேருக்கு கொரோனா  தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று பிரசாத் மேலும் தெரிவித்தார்.

author avatar
Dinasuvadu desk