சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா 24 மணிநேரத்தில் 49 பேருக்கு தொற்று உறுதி

சீனாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா 24 மணிநேரத்தில் 49 பேருக்கு தொற்று உறுதி

கடந்த 24 மணிநேரத்தில் சீனாவில் புதியதாக 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது .அதே நேரத்தில் 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக  நாட்டின் தேசிய சுகாதார ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனாவில் முற்றிலுமாக குறைந்து இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டு இருக்கும் நேரத்தில் கொரோனா மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது .இதுகுறித்து அதிகாரிகள் தெரிவிக்கையில் சமீபத்தில் உறுதிசெய்யப்பட்டவை, வடமேற்கு சீனாவில் ஒரு தன்னாட்சி பிரதேசமான சின்ஜியாங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

சீனாவில் இதுவரை உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை இப்போது 84,385 ஆக உள்ளது, இறப்பு எண்ணிக்கை 4,634 ஆகும். சீனாவில் மீட்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 79,003 ஆகும்.

author avatar
Castro Murugan
Join our channel google news Youtube