கொரோனா தடுப்பு பணிக்காகரூ. 3,000 கோடி உடனடியாக தேவை – முதலமைச்சர் பழனிசாமி பிரதமரிடம்

தமிழகத்திற்கு கொரோனாதடுப்பு நிதியை 3,000 கோடி ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடியிடம் முதலமைச்சர்  பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா தொடர்பாக பிரதமர் நரேந்திரமோடி இன்று  தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தமிழக முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்றுள்ளார்.

இந்நிலையில் கொரோனா தடுப்புப் பணிக்காக ரூ.3,000 கோடி உடனடியாக தேவை என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் முதல்வர் பழனிசாமி  வலியுறுத்தியுள்ளார். மேலும் நவம்பர் வரை ரேஷனில் வழங்க 55,637 மெட்ரிக் டன் துவரம் பருப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.