கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்தவர் தப்பியோட்டம்.. காவல் ஆய்வாளர் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளி தப்பியோடிய நிலையில், அந்த வழக்கின் முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

சென்னையில் உள்ள ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனவால் பாதிக்கப்பட்ட 74 வயது நபர் சிகிச்சை பெற்று வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அந்த முதியவர், கடந்த சில தினங்களுக்கு முன், அங்கிருந்து தப்பித்து வெளியே சென்றார்.

அந்த முதியவர் காணமால் போனதை அறிந்த அவரின் மகன், தனது தந்தையை கண்டுபிடித்து தருமாறு பூக்கடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் பூக்கடை காவல்துறையினர், வழக்கு பதிவு செய்து, அந்த முதியவரை தேடி வந்தனர்.

இந்நிலையில், முதியவர் தப்பி சென்ற வழக்கில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பூக்கடை காவல் நிலைய ஆய்வாளர் நாளை பதிலளிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவளித்துள்ளது. மேலும், கொரோனா நோயாளிகளை சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாக்க வேண்டியது, அரசாங்கத்தின் கடமை எனவும் தெரிவித்துள்ளது.

Recent Posts

கொத்துக் கொத்தாக வாக்காளர்கள் பெயர் நீக்கம்… தமிழிசை சௌந்தரராஜன் வருத்தம்!

Election2024: பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை மறுக்கப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் முதல் கட்டம் கடந்த 19ம் தேதி…

11 mins ago

தங்கச்சி கிடையாது தம்பி தான்! கில்லி படத்தை மிஸ் செய்த அழகி பட பிரபலம்?

Ghilli : கில்லி படத்தில் முதலில் தங்கை கதாபாத்திரம் கிடையாது தம்பி கதாபாத்திரம் தான் இருந்தது என சதீஷ் ஸ்டீபன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இயக்குனர் தரணி…

12 mins ago

ஒப்புகை சீட்டு வழக்கு – தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவு!

supreme court: ஒப்புகை சீட்டுகளை எண்ணக் கோரிய வழக்கில் தேர்தல் ஆணைய அதிகாரி ஆஜராக உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மக்களவை தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் விவிபேட் இயந்திரத்தில் பதிவாகும்…

32 mins ago

ஏழைகளுக்கான சொத்து பகிர்வு.., அமெரிக்காவை பின்பற்றும் காங்கிரஸ் வாக்குறுதி.?

Congress Manifesto : காங்கிரசின் சொத்து பகிர்வு வாக்குறுதி குறித்து இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் சாம் பிட்ரோடா விளக்கம் அளித்துள்ளார்.  நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சி…

53 mins ago

ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை… கேரள எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

Kerala: ராகுல் காந்திக்கு டிஎன்ஏ சோதனை செய்ய வேண்டும் என்று கேரளா எம்எல்ஏ கூறியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக…

2 hours ago

மஞ்சும்மல் பாய்ஸ் நடிகருடன் டும்..டும்..டும்…அபர்ணா தாஸ் திருமண க்ளிக்ஸ்.!

Aparna Das Marriage:  மலையாள சினிமாவின் அபர்ணா தாஸ் மற்றும் தீபக் பரமா பல ஆண்டுகளாக காதலித்து வந்தனர். சமீபத்தில் நிச்சயதார்த்த விழா முடிந்து காதலை அறிவித்த…

2 hours ago