மனிதர்கள் மீது பரிசோதிக்க அனுமதி!கிடைக்குமா? கொரோனா மருந்து

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் என்கிற கொரோனா தடுப்பு மருந்தை மனிதர்களின் மீது சோதனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்து உள்ளது.

பாரத் பயோடெக் நிறுவனம், இந்நிறுவனமானது ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கோவேக்சின் என்கிற தடுப்பு மருந்தை தயாரித்துள்ளது.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் இந்திய வைராலஜி கழகம் ஆகியவற்றோடு இணைந்து இந்த தடுப்பு மருந்தை அந்நிறுவனம் உருவாக்கி உள்ளதாகவும், அந்நிறுவனம் தாக்கல் செய்த விண்ணப்பத்தினை ஏற்றுக்கொண்ட இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களின் உடலில் செலுத்தி சோதனை செய்ய  அனுமதி அளித்துள்ளது.

அரசின் அனுமதியால்  வரும் ஜூலை மாதம் முதல் இந்தியாவில் மனிதர்களின் உடலில் செலுத்தி கோவாக்சின்  மருந்து சோதனை செய்யப்பட உள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதல் கொரோனா தடுப்பு மருந்து இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha