#Breaking: சென்னையில் கொரோனாவால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

#Breaking: சென்னையில் கொரோனாவால் மேலும் 20 பேர் உயிரிழப்பு!

சென்னையில் மேலும் 20 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை சென்னையில் தான் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றும் சென்னையில் இன்று ஒரே நாளில் 993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,12,059 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் 1,160 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில், இதுவரை 98,736 பேர் வீடு திரும்பியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஒரே நாளில் 20 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2,370 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மேலும் 17,469 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Join our channel google news Youtube