மதுரை குழந்தைகள் காப்பகத்தில் 9 குழந்தைகளுக்கு கொரோனா தொற்று…!

மதுரையில், இயங்கி வரும் சாந்தி குழந்தைகள் காப்பகத்தில் 9 குழந்தைகளுக்கும், 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் ஒரு வாரத்திற்கு தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மதுரையில், இயங்கி வரும் சாந்தி குழந்தைகள் காப்பகத்தில் 9 குழந்தைகளுக்கும், 2 பணியாளர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அந்த குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், மாவட்ட சுகாதார துறையினர், காப்பகத்தை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதுகுறித்து, சமூக ஆர்வலரான வழக்கறிஞர் முத்து குமார் கூறுகையில், கொரோனா தொற்று ஏற்படாத மற்ற குழந்தைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். காப்பகத்திற்கு வெளியில் இருந்து செல்பவர்கள் பாதுகாப்புடன் செல்ல வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.