தமிழக வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் போக்குவரத்து ஆணையருக்கும் கொரோனா தொற்று உறுதி.!

தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையரான பணீந்திர ரெட்டிக்கும், போக்குவரத்து ஆணையரான ஜவகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அரசியல் தலைவர்களான எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் உட்பட பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றும், சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இந்நிலையில், தற்போது தமிழகத்தின் வருவாய் நிர்வாக ஆணையரான பணீந்திர ரெட்டிக்கும், போக்குவரத்து ஆணையரான ஜவகருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து கிண்டியில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தில் இருவரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இருவருடனும் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.