ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்திருந்த பஞ்சாப் அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி!

பஞ்சாப் மாநிலத்தில், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீவிர போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த திங்கள் கிழமை, வேளாண் சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், ராகுல் காந்தி அவர்கள் கலந்து கொண்டார்.

மேலும், இந்தப் போராட்டத்தில்  பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர்  பால்பீர் சிங் சித்து ஆகியோர் பங்கேற்றனர். இந்நிலையில், ராகுல் காந்தியுடன் ஒரே மேடையில் அமர்ந்து இருந்த அமைச்சர் பால்பீர் சிங் சித்துவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.