தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று உறுதி.!

தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வருவதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், சேலம் மேற்கு தொகுதி தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்-க்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்கள் பொன்ராஜ் (அண்ணா நகர்), சந்தோஷ் பாபு (வேளச்சேரி) ஆகியோருக்கு ஏற்கனவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தற்போது தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன்ராஜ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு தேமுதிக துணை செயலாளர் எல்கே சுதிஷ்க்கு கொரோனா பாதித்த நிலையில், அவரது கட்சியின் வேட்பாளருக்கு தொற்று உறுதியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்